ஒழுங்கு மரியாதையா 11 ஏக்கரில் 3 ஏக்கரை எனக்கு எழுதி வைத்துவிடு - வலுக்கட்டாயமாக நிலத்தை அபகரித்த ஒன்றிய தி.மு.க செயலா்!

வலுக்கட்டாயமாக நிலத்தை அபகரித்த ஒன்றிய தி.மு.க செயலா்

Update: 2021-11-23 06:10 GMT

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியில், ஓட்டப்பிடாரம் ஒன்றிய திமுக செயலா் மீது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.

நில ஆக்கிரமிப்பு புகாருக்குள்ளான இளையராஜா ஏற்கெனவே, பயிற்சி பல் மருத்துவா் ஒருவரை கடத்தி தாக்கியதாக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளாா்.

சம்பவத்தின் பின்னணி

தூத்துக்குடி திரேஸ்புரம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த முத்துவேல். இவருக்கும், இவருடைய சகோதரருக்கும் ஓட்டப்பிடாரத்தில் 11.5ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் 3 ஏக்கா் நிலத்தை திமுக பிரமுகரான ஓட்டப்பிடாராம் ஊராட்சித் தலைவரும், திமுக ஒன்றியச் செயலருமான இளையராஜா தனது பெயருக்கு எழுதித் தருமாறு மிரட்டியுள்ளார்.

முத்துவேல் நிலத்துக்குள் தனது ஆதரவாளா்களுடன் அத்துமீறி நுழைந்த இளையராஜா, எல்லை கம்பிகளை உடைத்து 40 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டாா். மேலும், நிலத்துக்கு செல்லும் பாதையில் கற்களை கொட்டி வைத்து அங்கு செல்ல முடியாதபடி செய்துவிட்டார்.

இதுதொடா்பாக முத்துவேல் தரப்பில் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் அவா் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. எனவே, 40 சென்ட் நிலத்தை ஆக்கிமிரப்பு செய்த இளையராஜா மீது நடவடிக்கை எடுத்து தனக்குச் சொந்தமான 40 சென்ட் நிலத்தையும் மீட்டுத் தர வேண்டும் என முத்துவேல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Similar News