தாராபுரம்: அரசு போக்குவரத்து பெண் ஊழியரை அலுவலகத்திற்கு வரவழைத்து அடித்து துன்புறுத்திய தி.மு.க. செயலாளர்!

தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனையில் வேலை செய்யும் பெண் ஊழியை திமுக நகர செயலாளர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-22 01:38 GMT

தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனையில் வேலை செய்யும் பெண் ஊழியை திமுக நகர செயலாளர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனையில் வேலை செய்து வரும் பெண் ஊழியர் ஒருவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தனக்கு கடந்த 2015ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து பணிமனையில் வேலை கிடைத்தது. அப்போதிலிருந்து தாராபுரத்தில் வேலை பார்த்து வருகிறேன். இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் திமுகவினர் தொடர்ந்து தனக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். 


அதில் திமுக நகர செயலாளர் சேனாதிபதி என்பவர் தன்னை மிகவும் அச்சுறுத்தி வருகிறார். நீ அதிமுக ஆட்சியில் வேலைக்கு சேர்ந்தவள் எனவே உடனடியாக வேறு இடத்திற்கு பணிமாறுதல் செய்ய சொல்லி தொடர்ந்து வற்புறுத்தி வருவதாக பெண் ஊழியர் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக நகர செயலாளர் சேனாதிபதி என்பவர் வீட்டுக்கு வரவழைத்து தன்னையும், தனது கணவனையும் அடித்து சித்ரவதை செய்துள்ளார். இது திமுக ஆட்சி என்னை எதுவும் செய்ய முடியாது எனவும் சேனாதிபதி கூறியுள்ளார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்று சொல்லியவர்கள் ஒரு பெண் அரசு ஊழியரை இப்படி கொடுமை படுத்துவது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து திமுகவினர் அரசு ஊழியர்களை அடித்தும், மனரீதியாக தொந்தரவு அளித்து வருவது பெண் ஊழியர்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Facebook


Tags:    

Similar News