'ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தில் தி.மு.க போட்ட நாடகம்' - உண்மையை அம்பலப்படுத்திய அண்ணாமலை!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பு என்று தி.மு.க அரசு நாடகம் நடத்துகிறது.

Update: 2022-11-30 13:41 GMT

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் அது குறித்து அரசாணையை அறிவிக்க தவறியதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருக்கிறார். இது பற்றிய தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் கருத்து கூறுகையில், "ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பு என்ற திறனற்ற திமுக அரசின் நாடகத்தை அம்பலப்படுத்த தமிழக பா.ஜ.க கடமைப் பட்டுள்ளது" என்று குறிப்பிட்டு இருந்தார்.


செப்டம்பர் 26 தேதி தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு முதல்வர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மேலும் அக்டோபர் 3 தேதி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. அதனுடன் ஆன்லைன் விளையாட்டிற்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. அக்டோபர் 7 தேதி தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். அக்டோபர் 19 தேதி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. நவம்பர் 17ஆம் தேதி வரை அவசர சட்டத்திற்கு இன்னும் அரசாணை வெளியிடாததால் அந்த சட்டம் நடைமுறைக்கு வரவில்லை என்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளதாகவும் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.



மேலும் தமிழக அரசுக்கு தன்னுடைய கேள்விகளையும் அவர் முன் வைத்து இருக்கிறார். அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பிறகு, தமிழக அரசு அரசாணை ஏன் பிறப்பிக்கவில்லை?அவசர சட்டத்தை நடைமுறைப்படுத்த, "தமிழ்நாடு கேமிங் அதாரிட்டி" உருவாக்கப்பட வேண்டும். இன்றுவரை உருவானதா? அக்டோபர் 8ஆம் தேதி முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை ஆன்லைன் சூதாட்டத்தினால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, மாநில அரசு அரசாணையை அறிவிக்கத் தவறியதாலும், அது காலாவதியாகும் வரை காத்திருந்ததாலும், ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது என்று தி.மு.க அரசின் உண்மை முகத்தை மக்களுக்கு வெளிக்காட்டி இருக்கிறார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.

Input & Image courtesy: Twitter

Tags:    

Similar News