மாணவியிடம் ஆபாச பேச்சு..பேராசிரியரை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்!

Update: 2022-04-08 09:20 GMT

பொன்னேரியில் உலகநாதன் நாராயணசாமி அரசினர் கலைக்கல்லூரி உள்ளது. அங்கு மகேந்திரன் என்பவர் ஆங்கில உதவி பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில், மாணவியிடம் உதவி பேராசிரியர் மகேந்திரன் என்பவர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், வீட்டிற்கு வந்தால் நட்பை வளர்த்துக்கொள்ளலாம் எனக் கூறினார். இதற்கு மாணவி, நான் எதற்காக வீட்டிற்கு வரவேண்டும் என கேள்வி எழுப்பினார். மேலும், இது போன்ற நட்பு தேவையில்லை என்று கூறி அலைப்பேசியின் அழைப்பை துண்டிக்கிறார்.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தார். இதன் பின்னர் முதல்வர் உத்தரவின் பேரில் பெண் பேராசிரியர்கள் மாணவி மற்றும் உதவி பேராசிரியரிடம் விசாரணை நடத்தினர். இதில் தவறு செய்தது உறுதியானதை தொடர்ந்து உதவி பேராசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி நிர்வாகம் உயர்கல்வித்துறைக்கு பரிந்துறை செய்துள்ளது. மேலும், உதவி பேராசரியரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றபோது மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து அவரை தாக்க முற்பட்டனர். இதனால் அப்பகுதியில் சாலை மறியல் ஏற்பட்டு சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News