ரூ.2 கோடி லஞ்ச பணம் எதிரொலி பொதுப்பணித்துறை பெண் இன்ஜினியர் கைது!

வேலூர் மண்ட பொதுப்பணித்துறை பெண் இன்ஜினியராக பணியாற்றி வந்தவர் திடீரென்று லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது அரசு அதிகாரிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-12-01 03:13 GMT

வேலூர் மண்ட பொதுப்பணித்துறை பெண் இன்ஜினியராக பணியாற்றி வந்தவர் திடீரென்று லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது அரசு அதிகாரிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மண்டல பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (தொழில்நுட்பகல்வி) அலுவலகம் தொரப்பாடி தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் 9 மாவட்டங்கள் உள்ளது. இனிடையே செயற்பொறியாளராக ஷோபனா 57, என்பவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார். இவரின் பணி அரசு கல்லூரிகளில் கட்டிடம் கட்டுவதற்கான நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்வது வழக்கமாகும்.

கடந்த தீபாவளி பண்டிகைக்கு முன்னர் ஷோபனா கட்டிட ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்கப்படுவதாக புகார்கள் குவியத் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 2ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகம் மற்றும் அவரின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்து ரூ.2 கோடிக்கு மேல் பணம், நகைகள், வெள்ளப்பொருட்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் அவரை திருச்சி மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் பணியில் சேராமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று (டிசம்பர் 30) வேலூரில் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரை கைது செய்துள்ளனர். தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் சிறையில் அடைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவு உள்ளது என கூறப்படுகிறது. இன்ஜினியரே இவ்வளவு பணம் லஞ்சமாக பெறுகிறார் என்றால் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் எவ்வளவு லஞ்சம் வாங்குவார்கள் என்ற பேச்சுகள் தற்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News