மீனவர்களுக்கும் கிசான் கிரெடிட் கார்டு ! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் !

விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் கிரெடிட் கார்டு போன்று மீவர்களுக்கும் வழங்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் கால்நடை மீன்வளம் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மீனவர்களிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

Update: 2021-09-19 04:15 GMT

விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் கிரெடிட் கார்டு போன்று மீவர்களுக்கும் வழங்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் கால்நடை மீன்வளம் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மீனவர்களிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

இதன்பின்னர் பழவேற்காடு ஏரியில் உள்ள முகத்துவாரம் நிரந்தரமாக தூர்வார வேண்டும். அதானி துறைமுகம் விரிவாக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் மத்திய இணை அமைச்சரிடம் மனுக்களை வழங்கினர்.

இதன் பின்னர் மீனவர்களிடம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசும்போது, காசிமேட்டில் வசதிகளுடன் கூடிய மீன்பிடி துறைமுகம் சீரமைக்கப்படும் என கூறினார்.மேலும், மத்திய, மாநில அரசுகளுடன் பேசி பழவேற்காட்டில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Source: News 7 Tamil

Image Courtesy:Navajeevan Express


Tags:    

Similar News