கட்டாயம் மதமாற்றத்தில் மக்களை ஈடுபடுத்தும் மத போதகர் - மனைவி உட்பட இரண்டு பேர் கைது!

கட்டாய மதமாற்றம் செய்ததாக கிறிஸ்துவ மத போதகர் மற்றும் அவருடைய மனைவி உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Update: 2022-12-17 04:02 GMT

கொப்பால் கட்டாய மதமாற்றம் செய்வதாக கிறிஸ்துவ மத போதகர் மற்றும் அவருடைய மனைவி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்ட அவரின் 17 வயதுடைய மகன் ஆகியோரை சிறையில் இருந்து அடைத்து இருக்கிறார்கள். அவருடைய மகனை தற்பொழுது பல்லாரியில் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள். போபால் மாவட்டம் கரடரி சேர்ந்த சங்கர் என்பவர் கரடரி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தான் தற்பொழுது இந்த சம்பவம் வெளியாகி இருக்கிறது.


கரடகியில் கிரேஸ் பிரேயர் யசென்டர் நடத்தி வருபவர் பாஸ்டர் சாமுவேல் என்பவர். இவர் பணத்திற்காக கட்டாய மதமாற்றத்தை செய்து வருகிறார். அதற்காக என்னையும் என் குடும்பத்தையும் மதமாற்றம் செய்வதற்காக தினமும் கிறிஸ்துவ சம்பிதாயங்களை கடைபிடிக்க வேண்டும், இந்து கடவுள்களை வணங்கக்கூடாது என்று போன்று மிரட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் அவர் எங்கள் வீட்டில் இருந்த இந்து கடவுள் புகைப்படங்கள் மற்றும் பொருட்களை கால்வாயில் வீசியதாக கூறினார். இந்து கடவுளை வணங்கினால் நீங்கள் எல்லாம் இறந்து நரகத்திற்கு செல்வாய் என அவர்கள் கிறிஸ்துவ மதத்திலிருந்து விலகி மீண்டும் இந்து மதத்தை தழுவினால் என்னை கொன்று குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்படுவார்கள் என்று மிரட்டி இருக்கிறார் என தன்னுடைய போலீஸ் நிலையம் பதிவில் கூறியிருக்கிறார்.   


 மேலும் இது தொடர்பாக பல்வேறு குடும்பங்களை இவர்கள் கட்டாய மதமாற்றத்தின் பெயரில் கிறிஸ்துவ மதத்திற்கு மதமாற்றுவதாகவும் தகவல்கள் தெரிய வந்து இருக்கிறது. பாஸ்டர் சாமுவேல் மற்றும் அவரது மனைவி கைது செய்து கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்ட இருக்கிறார்கள். மேலும் அவருடைய மகன் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News