தருமபுரி: இருளர் இன மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கிய ஆட்சியர்.!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வசிக்கும் இருளர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் குடும்ப அட்டையுடன் கூடிய மளிகை பொருட்கள் ஆகியவற்றை ஆட்சியர் திவ்யதர்சினி வழங்கினார்.

Update: 2021-06-24 09:09 GMT

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வசிக்கும் இருளர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் குடும்ப அட்டையுடன் கூடிய மளிகை பொருட்கள் ஆகியவற்றை ஆட்சியர் திவ்யதர்சினி வழங்கினார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கும்மனூரில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 52 பேருக்கு வீட்டுமனை பட்டா, 12 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை மற்றும் தமிழக அரசு வழங்கி ரூ.4000 மற்றும் மளிகை பொருட்களை ஆட்சியர் திவ்யதர்சினி வழங்கினார்.

மேலும், பட்டா கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் விரைவில் வீடு கட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.

Similar News