தீபாவளி மறுநாள் அரசு விடுறை! தமிழக அரசு அறிவிப்பு!

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வருகின்ற 4ம் தேதி வர உள்ளது. இதனிடையே அதற்கு அடுத்த நாளான 5ம் தேதி அரசு விடுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-11-01 08:44 GMT

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வருகின்ற 4ம் தேதி வர உள்ளது. இதனிடையே அதற்கு அடுத்த நாளான 5ம் தேதி அரசு விடுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 04.11.2021 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவா, 05.11.2021 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றன.

இந்த கோரிக்கையை ஏற்று அரசு கவனமுடன் பரிசீலித்து தீபாவளிக்கு அடுத்த நாளான 05.11.2021 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 20.112021 (மூன்றாம் சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: TN Govt Statement

Image Courtesy:Behance

Tags:    

Similar News