25 வருசமா ரூ.1000 கோடி மோசடி செய்ததா சன்டிவி? தயாரிப்பாளரிடம் சிக்கிய ஒப்பந்த ஆவணம்.!
25 வருசமா ரூ.1000 கோடி மோசடி செய்ததா சன்டிவி? தயாரிப்பாளரிடம் சிக்கிய ஒப்பந்த ஆவணம்.!
சன் டிவியுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி சன் டிவி, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் தர வேண்டியிருக்கிறது.
இத்தனை வருடங்களாக காணாமல் போய்விட்டதாக கதை விடப்பட்டு வந்த அந்த ஒப்பந்தத்தை போராடி மீட்டுள்ளதாக தயாரிப்பாளர் எஸ்.கே.சதீஷ்குமார் கூறியுள்ளார். அது பற்றிய ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர், அந்த ஒப்பந்த பத்திரத்தின் நகலையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இது தமிழ் சினிமாத்துறையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அவர் இது பற்றி என்ன சொல்கிறார் வாங்க பார்க்கலாம். இது உண்மையா அல்லது புரளியா என்பது ஒட்டு மொத்த தயாரிப்பாளர்களுக்குத்தான் தெரியும்.
அந்த ஆடியோவில் ஜெ.எஸ்.கே. சதீஷ்குமார் கூறியுள்ளதாவது:
நமது சங்கத்துல பல வருடமா இருக்குற பிரச்சனை இது தனியார் தொலைக்காட்சிக்கிட்ட நம் சங்கம் போட்டிருந்த ஒரு ஒப்பந்தம் காணாமல் போய்விட்டது. அது திருடப்பட்டு விட்டதாக இத்தன நாளாக சொல்லப்பட்டு வந்தது. அந்த ஒப்பந்தம் கிடைக்காததால் நம் சங்கத்திற்கு பலகோடி வருமான வரவேண்டி உள்ளது. இது சம்பந்தமா பல முறை விவாதம் நடந்திருக்குது. முதலில் அப்படி ஒரு ஒப்பந்தம் இருக்குதா இல்லையா? என்ன நடந்தது? என்பது பற்றி பல நிர்வாகிகளுக்குத்தான் தெரியும்.
அந்த அக்ரிமண்ட் நடந்தது உண்மைதான். அதுவும் இருக்குது. 1995ல் கே.ஆர்.ஜி. தலைவராக இருந்தபோது தனியார் தொலைக்காட்சிகிட்ட அந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதாவது ஒரு வாரத்திற்கு 6 பாடல்கள் ஒளிபரப்புவதற்கு தொலைக்காட்சி நம் சங்கத்திற்கு ஒரு லட்சம் கொடுக்க வேண்டும். அதே பாடல்கள் மீண்டும் இரண்டாம் முறை ரிப்பீட் செய்யும்போது ஒரு பாட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய். அதற்கு அடுத்து எத்தனை முறை ஒளிபரப்பு ஆனாலும் அதற்கு 2 ஆயிரம். மேலும், எங்க தொலைக்காட்சியை தவிர வேறு எந்த தொலைக்காட்சிக்கும் நீங்க பாடல்களை கொடுக்கக் கூடாது. வேண்டுமானால் தூர்தர்ஷனுக்கு கொடுங்கள் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.