தென்மேற்கு பருவக்காற்று.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது.

Update: 2021-07-15 02:42 GMT

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருந்தது. 


அதன்படி தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் இரவு முழுவதும் மிதமான மழை பெய்தது. சென்னையை, பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News