சத்தியமங்கலம்: வயல்வெளியில் திடீரென்று இறங்கிய ஹெலிகாப்டர்: அதிர்ச்சியில் கிராம மக்கள்!

பெங்களூருவில் இருந்து கணவன், மனைவியை ஏற்றிக்கொண்டு தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கொச்சின் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஹெலிகாப்டர் ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதி வழியாக பறந்து கொண்டிருந்தபோது அத்தியூர் என்ற இடத்தில் காலை சுமார் 11.15 மணிக்கு திடீரென்று தரை இறங்கியது.

Update: 2022-01-08 11:16 GMT

பெங்களூருவில் இருந்து கணவன், மனைவியை ஏற்றிக்கொண்டு தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கொச்சின் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஹெலிகாப்டர் ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதி வழியாக பறந்து கொண்டிருந்தபோது அத்தியூர் என்ற இடத்தில் காலை சுமார் 11.15 மணிக்கு திடீரென்று தரை இறங்கியது.

அப்போது மிகவும் தாழ்வான பகுதியில் ஹெலிகாப்டர் பறப்பதை பார்த்த கிராம மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த சம்பவத்தை கிராம மக்கள் சிலர் செல்போனில் படம் பிடித்தனர்.

இது பற்றிய விசாரித்தபோது, பெங்களூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக, கணவன் மனைவியுடன் சென்று மீண்டும் திரும்பியபோது அத்தியூர் பகுதியில் தரை இறங்கியுள்ளது. பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்கியுள்ளது. திடீரென்று வயல் வெளியில் ஹெலிகாப்டர் தரையிறங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News