நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள்: எச்சரிக்கை விடுத்த நீதிபதி?

தற்காலிக பணியாளர்கள் பதவி உயர்வு குறித்து நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத தமிழக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்.

Update: 2023-02-23 02:15 GMT

பல ஆண்டுகளாக தமிழக அரசின் கல்வித் துறையின் கீழ் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வந்த பல்வேறு ஆசிரியர்கள் அவர்களை பகுதி நேர ஊதியர்கள் ஆக கருதி அவர்களுக்கு உரிய பலன்களை வழங்குவது தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்ந்த பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழங்கிய மனுவில் நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை தாக்கல் செய்து தற்போது இருக்கிறார்கள்.


ஆனாலும் அந்த உத்தரவுகளை பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அதற்கான அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் அதை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நீதிபதி இந்த வழக்கை விசாரணை செய்தார். முடிவில் பள்ளிக்கல்வித்துறை நீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளை நடைமுறைப்படுத்தப் படவில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு இருந்து தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் தற்போது வரை நிலுவையில் தான் இருக்கிறது.


உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை நிறைவேற்றி அதன் அறிக்கையை தற்பொழுது நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் தவறும் பட்சத்தில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை இயக்குனர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பது இருக்கிறார். மேலும் இந்த வழக்கின் விசாரணை அடுத்த கட்ட விசாரணை வருகின்ற 24-ம் தேதி நடத்தப்படுவதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News