திருக்குறளின் 108 அதிகாரங்கள் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளதா? தமிழக பள்ளி கல்விதுறைக்கு ஐகோர்ட் சராமரி கேள்வி?

திருக்குறளில் 108 அதிகாரங்கள் பாடப்புத்தகத்தில் சேர்க்கப் பட்டுள்ளதா? தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் கேள்வி?

Update: 2022-09-27 13:32 GMT

மதுரையை சேர்ந்த வக்கீல் ராம்குமார் என்பவர் தற்போது மதுரை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றே தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனு வழக்கில் கூறியிருப்பதாவது: தமிழ் மொழியில் ஒப்பற்ற சிறப்புகளில் ஒன்றான திருக்குறள் உலகப் பொதுமறை ஆக போற்றப்படுகிறது. இதனை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் தமிழ் ஆங்கில மொழிகளில் பிரெய்லி மொழியில் புத்தகங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.


இது குறித்து உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண ஆகியோர் முன்னிலை விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த வழக்கை விசாரணை செய்த மனுதாரர் வக்கீல் அழகுமணி ஆஜராகி கூடுதல் மனு ஒன்றியம் தாக்கல் செய்தார். அதில் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில் திருக்குறளில் 108 அதிகாரங்கள் அதாவது அறத்துப்பால் பொருட்பால் அதிகாரங்கள் பாடத்திட்டத்தில் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று கடந்த 2016 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.


இந்த உத்தரவை முறையாக அமல்படுத்தப்படவில்லை. அதாவது புத்தகங்களின் திருக்குறளை இறுதிப் பக்கத்தில் அச்சிடுகிறார்கள். ஆனால் அவற்றில் இருந்து தேர்வுகளில் கேள்விகளும் கேட்பதில்லை. இதனால் பாடப்புதக்களின் மேற்கண்ட திருக்குறளை சேர்க்க வேண்டும் என்பதன் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. எனவே இந்த உத்தரவை கடுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்ட இருந்தது. மனுதாரரின் இந்த ஒரு கோரிக்கைகளை குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இரண்டு வாரத்தில் உரிய பதிலை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்ட வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News