நடிகனாக ஆசைப்பட்ட என்னை நீதிபதியாகியவர் எம்.ஜி.ஆர் - முன்னாள் தலைமை நீதிபதி உருக்கம்!

நடிகனாக ஆசைப்பட்ட என்னை தற்பொழுது நீதிபதியாக்கியவர் எம்.ஜி.ஆர் என்று முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம் பேச்சு.

Update: 2023-01-23 00:46 GMT

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பணியாற்றிய கற்பக விநாயகர் ஜார்கண்ட் ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் 1972 ஆம் ஆண்டு வக்கீல் ஆக பதிவு செய்து சட்ட தொழிலை தொடங்கினார். சட்டப்பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த அவருக்கு சென்னையில் பாராட்ட விழா நடைபெற்றது. இதில் சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.


மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சிறப்பான உதவி வழங்கினார். பின்னர் அதன் பின்னர் பேசிய நீதிபதி கற்பக விநாயகர் எம். ஜி.ஆர் மற்றும் இரண்டாவது ஐகோர்ட் நீதிபதியாக பரிந்துரை செய்த முன்னாள் நீதிபதி அருணாச்சலம் பிறகு என்னுடைய மனைவி என்று அவர் கூறியிருந்தார். எம்.ஜி.ஆர் முதலமைச்சரானதும் ஒரு நாள் என்னை அழைத்து அரசு குற்றவியல் வக்கீலாக பதவியேற்கச் சொன்னார்.


நான் யோசித்த போது என் தந்தை இலங்கையில் மாஜிஸ்திரேட் ஆக இருந்தவர்.அவரது மகனான நான் செய்ய விரும்புகிறேன் என்று என்னிடம் கூறியதும், அரசு வக்கீலாக பதவியேற்றேன். ஆனால் அப்பொழுது ஊதியம் குறைவு என்பதால் ராஜினாமா செய்ய இருந்தேன். ஆனால் எம்.ஜி.ஆர் என் மீது கோபம் கொண்டார், மீண்டும் நான் பணியில் செய்வேன். ஒருவேளை நான் நடிகராகி இருந்தால் என் வாழ்க்கை தொலைந்து போயிருக்கும். ஆனால் தற்பொழுது திருப்தியான வாழ்க்கையில் ஒழுக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இதற்க்கு காரணம் எம்.ஜி.ஆர் தான் என கூறினார்.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News