தஞ்சாவூர்: பிள்ளையார் கோயில் தேர் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கிய இந்து முன்னணி!

Update: 2022-04-15 12:36 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிள்ளையார் கோயில் தேர் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் இந்து முன்னணி சார்பில் நீர், மோர் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் உள்ள ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் திருக்கோயிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் இன்று கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது வந்திருந்த பக்தர்களின் நலன் கருதி இந்து முன்னணி சார்பாக நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.

அங்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் நீர், மோர் வழங்கப்பட்டது. இதனை பக்தர்கள் ஆர்வமுடன் குடித்து தாகத்தை தீர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News