தமிழகத்தில் தலை தூக்கும் லவ் ஜிகாத் - அநியாயமாக பறிபோன இளம்பெண்ணின் உயிர்: ஆசைகாட்டி அரங்கேறிய சம்பவம்!

Hindu girl commits suicide after her 'friend' Amir Khan disappeared after proposing to marry her, Love Jihad angle alleged

Update: 2022-03-03 00:45 GMT

தமிழகத்தில் திம்மாம்பட்டி கிராமத்திற்கு அருகிலுள்ள உப்பத்துக்காடு பகுதியைச் சேர்ந்த இந்துப் பெண் தற்கொலை செய்துகொண்டார். அவரது நண்பரான அமீர்கான், திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதால் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டார். இந்த சம்பவம் ஜனவரி 18 அன்று நடந்தது, பின்னர் அவர்  உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அதே நாளில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

வழக்கை பதிவு செய்த போலீசார், இந்த மரணம் இயற்கைக்கு மாறானது என்றும், யாரோ ஒருவரால் தூண்டப்பட்ட மரணம் என்றும் கண்டறிந்தனர்.  சிறுமியின் கிராமத்தைச் சேர்ந்த அமீர்கானிடம் விசாரித்ததில், இருவரும் உறவில் இருப்பது தெரியவந்தது.

பிப்ரவரி 24 அன்று உள்ளூர் எஸ்ஐ சிவசங்கர் அமீரிடம் விசாரித்தபோது, ​​​​வாட்ஸ்அப்பில் நீண்ட உரையாடல்களை வைத்திருப்பதையும், சிறுமி இறப்பதற்கு முன் உரையாடல்களின் தொகுப்பை நீக்கிவிட்டதையும் கண்டுபிடித்தார். அவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், கானிடம் தேவைப்படும் போதெல்லாம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

வணிகவியல் பட்டதாரியான அமீர் கான், சேலத்திற்கு அருகிலுள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அமீரும், தற்கொலை செய்துகொண்ட பெண்ணும் பழகி வந்தது, ஜனவரி 15 அன்று பெண்ணின் குடும்பத்திற்கு தெரிய வந்தது. பின்னர் அவர்கள்தங்கள் மகளிடம் இருந்து ஒதுங்கி, அவளது வாழ்க்கையை நாசமாக்குவதை நிறுத்துமாறு எச்சரித்தனர்.

பெற்றோர் எச்சரித்த பிறகும், திருமண ஆசை காட்டி மேலும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். பின்னர் திடீரென பெண்ணின் தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்கத் தொடங்கினான் என்று வழக்கறிஞர் ராமலிங்கம் தெரிவித்தார்.

அமீர் இதற்கு முன்பு பல பெண்களுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்றும் கருதுகின்றனர். விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்துள்ளனர்.

இது காதல் விவகாரம் அல்ல, அதை தாண்டிய விஷயம். பையனின் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மெசேஜ்கள், அரட்டைகளைப் பார்த்தால் அது லவ் ஜிகாத் என்பது தெளிவாகிறது. அமீர் கான் பல பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். இவருடைய லவ் ஜிகாத் வலையில் மேலும் பல இந்துப் பெண்கள் சிக்கியுள்ளனரா என போலீசார் விசாரிக்க வேண்டும். இந்து சிறுமிகளின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது என்று வக்கீல் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். 

 

Tags:    

Similar News