இறந்த கிறிஸ்தவரது உடலுக்கு ஈமச் சடங்கு செய்து முடித்த இந்து முன்னணி!

Update: 2022-01-31 05:11 GMT

சென்னை எழும்பூரில், உடல்நலக்குறைவால் இறந்த  "கோல்டன்" என்ற கிறிஸ்தவரது உடலுக்கு, சென்னை மாவட்ட இந்து முன்னணியினர் ஈம சடங்கு செய்தது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.  


இந்து முன்னணி அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்கள், இந்து மக்களின் உரிமைகள்,  இந்து  சமூகப் பழக்க வழக்கங்களை காப்பதற்காக உருவான இயக்கமாக அனைவராலும் கருதப்பட்டு  வருவது தவறாகும்.


உண்மை அதுவல்ல, சமூகத்தில் நீதிக்காகவும், அனைத்துத்தரப்பட்ட  மக்களின் தேவைக்காகவும் இயங்கி வருகிறது.  ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்கு உணவு வினியோகம், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள். போன்ற எண்ணற்ற சேவைகளைச் செய்து வருகிறது.


இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு,  சென்னை எழும்பூர் KMC மருத்துவமனையில், "கோல்டன்" என்ற கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். உடனடியாக இத்தகவல் அறிந்த இந்து முன்னணி பொறுப்பாளர்கள் இப்பிரச்சினையில் தலையிட்டு, ஓட்டேரி இடுகாட்டில் "கோல்டன்" என்பவரது உடலை ஈம சடங்கு செய்து முடித்தனர். பின்னர் அவரது மகளையும் பத்திரமாக சொந்த  ஊருக்கு அனுப்பி வைத்தனர்.


இந்து முன்னணி அமைப்பின் இந்த உன்னதமான செயலுக்கு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News