கோவிலில் கலவரத்தை ஏற்படுத்த துடிக்கும் விரோதக் கட்சிகள்.. இந்து முன்னணி வைத்த கோரிக்கை!

ஆலயங்களில் கலவரம் ஏற்படுத்தும் இந்து விரோத கட்சிகளை தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும்.

Update: 2023-06-16 04:25 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கூத்தலூர் அம்பேத்கர் நகரில் மாயசின்னான் கோயில் படைப்பு விழாவில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் சாமி கும்பிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக ஊராட்சித் தலைவர் மீனாள், அவரது கணவர் சுப்பிரமணியன் உட்பட 14 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கோவிலுக்குள் சென்றுள்ளனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்டதன் விளைவாக நாச்சியாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக இந்து முன்னணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறது. 


திமுக ஆட்சிக்கு வந்த பின் ஆலயங்கள் இடிக்கப்பட்டது தொடர்கதையானது. அதனுடன் இணைந்து துன்ப கதைகளாக மேல்பாதி, கரூரில் ஆலயங்கள் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்தாலே மத கலவரங்கள், ஜாதி கலவரங்கள் வரும் என அந்தக்கால பெரியவர்கள் சொல்வது உண்மை தானோ? என நினைக்க வைக்கிறது. ஏனெனில் காலங்காலமாக நடைபெற்று வரும் திருவிழாக்களில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளால் பிரச்சினைகள் எழுவது என்பது சந்தேகத்துரியதாகவே உள்ளது என்று இந்து முன்னணி தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறது.


மேலும் இந்து மதத்தை இழிவுபடுத்துவது, இந்து மதத்தின் மீது களங்கம் விளைவிப்பது என்பதில் இந்து விரோத கட்சி திமுகவும், மதமாற்ற வியாபாரிகளின் கைப்புள்ள திருமாவளவனின் கட்ட பஞ்சாயத்து கட்சியான விசிகவும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பது தமிழகம் அறிந்த உண்மை. ஆலயங்களில் கலவரம் ஏற்படுத்தி குளிர்காய நினைக்கும் இந்து விரோத, துரோக கட்சிகளை ஆன்மீக அன்பர்களும், தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என பொது மக்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று இந்து முன்னணி தன்னுடைய கருத்தை கூறி இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News