கோயிலை இடிக்க வந்த வருவாய்த்துறையை திருப்பி அனுப்பிய இந்து முன்னணி!

Update: 2022-04-07 08:52 GMT

திருப்பூர் மாவட்டத்தில் கருப்பராயன் கோயில் மற்றும் கருவண்ணராயர் கோயிலை இடிக்க வந்த வருவாய்த்துறையினரை இந்து முன்னணி நிர்வாகிகள் திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், உடுமலை கருப்பராயன் கோயில் கருவண்ணராயர் கோயிலை வருவாய்த்துறையினர் இடிப்பதற்கு வந்தபோது, இந்து முன்னணி மூலம் கோயிலை இடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, தற்போது வழக்கு தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயில் இடிப்பதை நிறுத்தி வைக்ககோரி ஆணை பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News