அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை விடுவிக்க வேண்டும் - சுப்பிரமணியன் சுவாமி கடிதத்திற்கு தி.மு.க அரசின் பதில் என்ன?

அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்.

Update: 2022-12-03 05:31 GMT

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அரசு கட்டுப்பாட்டில் இருந்து அனைத்து இந்து கோவில்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும் விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை முன்னாள் முன்னாள் எம்.பி சுப்பிரமணியன் சுவாமி அறிவுறுத்தி இருக்கிறார். மேலும் இது தொடர்பாக அவர் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி இருக்கிறார். குறிப்பாக அந்த கடிதத்தில் கூறுகையில், தமிழகத்தில் உள்ள இந்து கோவில்கள் மற்றும் நிறுவனங்களை பல்லாண்டுகளாக அரசின் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்து இருக்கிறது.


இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 25 மற்றும் 26 பிரிவுகளுக்கு எதிரானது. உச்சநீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கு ஒன்றில் தமிழக அரசு எதிர் மனுதாரராக இருந்து இருந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதில் கோவில்கள் மதம் சார்ந்த நிகழ்வுகளை அரசு நடத்தக்கூடாது. கோவில்களில் ஏதேனும் நிதி சார்ந்த முறை கேடுகள் நிதி சார்ந்த சிக்கல்கள் இருப்பின் அதற்கு தீர்வு காண குறிப்பிட்ட கால அளவு வரை அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளலாம்.


ஆனால் முழு அதிகாரத்தையும் எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இந்து கோவில்களையும் மற்றும் நிறுவனங்களையும் விடுவிக்க வேண்டும் தவறினால் தமிழக அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர்வேன் என்று முன்னாள் எம்.பி சுப்பிரமணிய சுவாமி குறிப்பிட்டு இருந்தார்.

Input & Image courtesy: Hindu news

Tags:    

Similar News