இஸ்லாமியரின் பீடி நிறுவனத்துக்கு "முருகன் பீடி" என்று பெயர் ! உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தில் இந்து முன்னணி புகார் !
இஸ்லாமியரின் பீடி நிறுவனத்துக்கு "முருகன் பீடி" என்று இந்துக்கடவுளின் பெயரை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
இது குறித்து இந்துமுன்னணி வெளியிட்ட அறிவிப்பில் :
அப்துல் கரிம் எனும் இஸ்லாமியர் "முருகன் பீடி" என பெயரிட்டு, பீடிகட்டில் முருகப்பெருமானின் திருவுருவத்தை அச்சிட்டு விளம்பரம் செய்து இந்து கடவுள் முருகனை அவமதித்ததற்காக அவரை கைது செய்ய வலியுறுத்தி, அன்னியூர் காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியரின் பீடி நிறுவனத்துக்கு "முருகன் பீடி" என்று பெயரை வைத்துள்ளது இந்து சமுதாய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.