"இந்துக்களுக்கு ஆதரவானவர்களுக்கு எங்கள் ஆதரவு !"- வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் இந்து முன்னணி முடிவு!

Update: 2022-02-08 12:21 GMT

"பசுவதை தடுப்புச்  சட்டம், கட்டாய மதமாற்றத் தடைச்  சட்டம் கொண்டு வருபவர்களை  தேர்தலில்  ஆதரிப்போம்" என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் கடேஸ்வரர் சுப்பிரமணியம் அவர்கள் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ளது, அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை இறக்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பு நடக்கவிருக்கும் தேர்தலில் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வர சுப்ரமணியம் அவர்கள்  தெரிவித்துள்ளதாவது : இந்து முன்னணி அமைப்பு அரசியல் கட்சி கிடையாது. திருச்சியில் நடந்த எங்களது நிர்வாகக்குழு கூட்டத்தில் தேர்தலில் இந்துக்களுக்கு எதிரானவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும், பசுவதை தடுப்பு சட்டம் மற்றும்  கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வருபவர்களை ஆதரிப்போம். என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆகையால் இந்துக்களுக்கு ஆதரவாக  செயல்படுபவர்களுக்கு  உள்ளாட்சித் தேர்தலில் எங்களது ஆதரவை  கொடுப்போம்.

என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News