200 ஆண்டுகள் பழமைவாய்ந்த முனீஸ்வரர் கோயிலை அகற்ற முயலும் இந்து சமய அறநிலைய துறை ! எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம் !

Update: 2021-09-29 09:36 GMT

தமிழகத்தில் சமீபகாலமாக பேசுபொருளாக இருப்பது தமிழக  இந்துசமய அறநிலையத்துறையின் செயல்பாடு.

அனைத்து இந்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை, பிராமணரல்லாதவர்கள் அர்ச்சகராகலாம் போன்ற இந்து விரோத செயல்களை அமல்படுத்த தி.மு.க  அரசு முனைந்து வருகிறது. கொரோனா பரவலை காரணம் காட்டி வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு  தளங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பு தொடர்வதாக தமிழக அரசு அறிவித்திருப்பது .இந்து மக்களை எரிச்சலடைய செய்துள்ளது.  

இந்நிலையில் செங்கல்பட்டு ஆலந்தூர் அருகில் பூந்தோட்டம் என்னும் இடத்தில்   200 ஆண்டுகளாக கிராம மக்கள் வழிபட்டு வந்த முனீஸ்வரர் கோயிலை இந்து சமய அறநிலைய அறநிலையத்துறை அகற்றுவதற்கு முயற்சி செய்வதாக இந்து முன்னணி போராட்டம் நடத்தியது.




 இந்த முனீஸ்வரர் கோயிலை அகற்ற முயலும் தி.மு.க அரசின் மீது அப்பகுதி மக்கள் கோவத்தில் உள்ளனர்.  

Hindu Munnani ( Twitter Handle )

Tags:    

Similar News