புயல் சேதங்களை எப்படி சமாளிப்பது.. மாநில பேரிடம் மையத்தில் முதலமைச்சர் ஆய்வு.!

புயல் சேதங்களை எப்படி சமாளிப்பது.. மாநில பேரிடம் மையத்தில் முதலமைச்சர் ஆய்வு.!

Update: 2020-11-24 16:52 GMT

சென்னைக்கும் பாண்டிச்சேரிக்கு இடையில் நாளை நிவர் புயல் கரையை கடக்க உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டம் மற்றும் ஒரு சில உள் மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யும். மற்றும் மணிக்கு 120 முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ஆபத்தான் இடங்களில் உள்ளவர்களை முகாம்களில் தங்க வைப்பது, ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பு வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், மாநில பேரிடர் மேலாண்மை மையத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றொரு ஆய்வை மேற்கொண்டார்.


இந்த ஆய்வு கூட்டமானது சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை மையத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.


ஏற்கனவே நாடு முழுவதும் கொரோனாவிலிருந்து மீண்டு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது. தற்போது புயல் வேற தமிழகத்தை தாக்குவதால் பொதுமக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். சேதம் இன்றி புயல் கரையை கடந்தால் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதி அடைவார்கள். இறைவன்தான் வழிகாட்ட வேண்டும் என பலர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
 

Similar News