"நான் விவசாயி! ஸ்டாலினுக்கு என்ன தொழில் தெரியும்?" - எடப்பாடி ராக்ஸ்!

"நான் விவசாயி! ஸ்டாலினுக்கு என்ன தொழில் தெரியும்?" - எடப்பாடி ராக்ஸ்!

Update: 2020-11-11 17:31 GMT
நான் விவசாயி என்று ஸ்டாலின் எனக்கு சான்றிதழ் அளிக்க தேவையில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் கெரோனா தடுப்பு பணிகள் பற்றிய ஆய்வு நடத்தி வந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

“எனக்கு விவசாயம் தெரியும், திமுக தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு என்ன தெரியும். மேலும் விவசாயி என்ற சான்றிதழை அவர் எனக்கு தரவேண்டிய அவசியமில்லை. நான் விவசாயம் என்னும் தொழில் செய்கிறேன். ஸ்டாலினுக்கு என்ன தொழில் இருக்கிறது.

நான் முதலமைச்சராக தற்போது இருக்கும் போதிலும் விவசாயத்தை தொடர்ந்து செய்து வருகிறேன். நான் சிறு வயது முதலே எவ்வளவு கடின உழைப்பாளி என்று என் ஊர் மக்களைக் கேட்டால் தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதலமைச்சர் உரைக்கு பின்னர் அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவினர், விவசாயம் தெரிந்த முதல்வர் மற்றும் விவசாயத்தை பற்றி எதுவும் தெரியாமல் துண்டு சீட்டில் எழுதி வைத்து படிப்பதுதான் அவருக்கு தெரிந்த ஒரே தொழில் என்று கூறி வருகின்றனர்.

Similar News