செங்கல்பட்டில் சட்டவிரோத ஜெபக்கூடம் தடுத்து நிறுத்தம்!

Update: 2022-04-07 12:06 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வந்த ஜெபக்கூடத்தை இந்து முன்னணி தடுத்து நிறுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், வெண்பேடு கிராமத்தில் சட்டவிரோதமாக வயல்வெளியில் ஜெபக்கூடத்தை கிறிஸ்தவர்கள் கட்டி வந்தனர். இதனை அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதன்பின்னர் அங்கு சட்டவிரோதமாக கட்டுமான பணிகளை மேற்கொள்வதை உடனடியாக கைவிடும்படி இந்து முன்னணி எச்சரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து அந்த பணிகள் நிறுத்தப்பட்டது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News