மெழுகு சிலை வடிவமைத்து குழந்தைகளுக்கு காதுகுத்து: உயிரிழந்த தம்பியின் ஆசையை நிறைவேற்றிய சகோதரி!

Update: 2022-03-14 13:21 GMT

உயிரிழந்த தம்பியின் உருவத்தை போன்று மெழுகுசிலை வடிவமைத்து அவரின் மடியில் தனது குழந்தைகளுக்கு காதுகுத்தி ஆசையை நிறைவேற்றிய சகோதரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை, இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதற்கிடையில் இவரின் மூத்த சகோதரியின் குழந்தைகளுக்கு காதணி விழா நடத்துவதற்கு அவரது குடும்பத்தார் முடிவு செய்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் பாண்டித்துரை பங்கேற்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம் ஆகும்.

இதனிடையே பாண்டித்துறையின் குடும்பத்தார் அவரது உருவம் போன்று பெங்களூருவில் மெழுகு சிலை வடிவமைத்தனர். அதனை காதணி விழாவுக்கு குதிரை வண்டியில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். அதன் பின்னர் காதணி விழாவில் பாண்டித்துரை பங்கேற்பது போன்று அவரின் மெழுகு சிலையை சோபாவில் அமர வைத்தனர். அவரின் மடியில் குழந்தைகளுக்கு அவரது சகோதரி காதுகுத்தி மகிழ்ந்தார். இதனை பார்த்த உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கண்களில் தண்ணீர் வந்தது. சகோதரன் இல்லாத குறையை மெழுகுசிலை அமைத்து தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட சகோதரிக்கு பாராட்டுக்களை குவிந்து வருகிறது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News