ஜம்முவில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் தருமபுரி கொண்டுவரப்பட்டது.!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வந்த எஸ்.பூபதி ராணுவ வாகனத்தில் சென்றபோது விபத்து நேரிட்டது. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின உடல் தருமபுரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது.

Update: 2021-06-06 05:15 GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வந்த எஸ்.பூபதி ராணுவ வாகனத்தில் சென்றபோது விபத்து நேரிட்டது. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின உடல் தருமபுரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கம்மாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.பூபதி, 27, இவர் இந்திய ராணுவ வீரர் ஆவார். இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 4ம் தேதி ராணுவ வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வாகனம் விபத்திற்குள்ளானது. இந்த விபதத்ல் ராணுவ வீரர் பூபதி மரணமடைந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகாவிற்குட்பட்ட கம்மாளப்பட்டி என்ற கிராமத்திற்கு இன்று கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மறைந்த ராணுவ வீரரின் உடலுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் ராணுவ வீரரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Tags:    

Similar News