தி.மு.க செந்தில் பாலாஜிக்கு ஒரு வாரம் கெடு விடுத்த அண்ணாமலை - பண்ணலனா அப்பறம்??

தி.மு.க செந்தில் பாலாஜிக்கு ஒரு வாரம் கெடு விடுத்த அண்ணாமலை - பண்ணலனா அப்பறம்??

Update: 2020-11-17 10:25 GMT

தி.மு.க கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு எச்சரிக்கை செய்தியை விடுத்துள்ளார் பா.ஜ.க தமிழக துணைத்தலைவர் முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை.

அந்த செய்தியானது "வருகின்ற 24.11.2020 -ஆம் தேதிக்குள் கரூரில் உள்ள சுவறுகளில் கரூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் திரு.செந்தில் மாலாஜி அவர்களின் ஆலோசனையின்பேரில் எழுதப்பட்டுள்ள ”GO BACK MODi” என்ற வாசகத்தை முற்றிலுமாக அழித்து விட வேண்டும்.

தவறும் பட்சத்தில்..

கரூரில் மற்றும் உள்ள சுவறுகளில் 25.11.2020 முதல் உங்களைப்பற்றி *"ஜந்து கட்சி அம்மாவாசை"* என எனது கையாலேயே எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

தயவு செய்து தவிர்க்க முற்படுங்கள். நாங்கள் மிகவும் ஆரோக்கயமான முறையில் அரசியல் செய்பவர்கள்.

தயவுசெய்து... எங்களையும் உங்களுடைய லெவலுக்கு இழுத்து நீங்கள அசிங்கப்படவேண்டாம்.

நீங்கள் எந்த அளவிற்கு எங்களுக்கு மதிப்பும் மரியாதையையும் கொடுக்கின்றீர்களோ...

அதை விட பன்மடங்கு அளவிற்கு நாங்களும்... உங்களுக்கு பதில் மரியாதை தர தயாராக இருக்கின்றோம்." என்கிறது.

Similar News