தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் இருக்கிறதா? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

Update: 2022-04-07 09:12 GMT

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுகாதாரம் பற்றி மணற்சிற்பங்களை வரைகின்ற பணியில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தை பொறுத்தமட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் பற்றி எவ்வித அறிகுறியும் இல்லை. கொரோனா தொற்று எப்போதும் உருமாருவது வழக்கமான ஒன்று. ஆனால் அது போன்ற புதிய வகை வைரஸ் தமிழகத்தில் யாருக்கும் இல்லை. எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News