சென்னையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உடைய ஒருவர் கைது - இன்னும் எத்தனை பேர் உள்ளனரோ?

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதால் சந்தேகத்தின் பெயரில் ஒரு இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Update: 2022-11-12 12:56 GMT

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதால் சந்தேகத்தின் பெயரில் ஒரு இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சிலர் இருப்பதாக சந்தேகித்து போலீசாரால் தொடர்ச்சியாக பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ராயபுரம் கல்மண்டலம் அருகே போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபொழுது அந்த வழியாக ஒரு இருசக்கர வாகனத்தில் அந்த மூன்று பேர் வந்தனர்.

போலீசாரை கண்டதும் உடனே தப்பியுள்ளனர் அவர்களை பிடிக்க முற்பட்டபோது ஒருவனது கைப்பை போலீசாரிடம் சிக்கிக்கொண்டது. இந்த நிலையில் அந்த கைப்பையை ஆராய்ந்தபோது அதில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு குறித்த குறிப்புகளும் வெடிகுண்டு தயாரிப்புக்கான சில வேதியல் பொருட்களும் எழுதி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து மூவரை விரட்டிப் பிடித்த போலீசார் நாகூர் மீரான் என்ற இளைஞரை கைது செய்து மற்ற இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source - Polimer News

Similar News