சக நிர்வாகிகளுக்கு இடையே விடுத்த கொலை மிரட்டல்... தொடரும் தி.மு.க சேர்மனின் அடாவடி!

தி.மு.க நிர்வாகி ஒருவர் ஊராட்சி ஒன்றியத்தின் டெண்டர் விடும் பகுதிகளில் ஏற்பட்ட பிரச்சனையால் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார்.

Update: 2023-04-03 01:00 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளராக இருப்பவர்தான் வடிவேலு என்பவர். இவர் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின் சேர்மன் ஆகவும் பதவி வகித்து வருகிறார். இத்தகைய சூழ்நிலையில் ஊராட்சி யூனியன் மூலம் விடப்படும் டெண்டர்கள் அனைத்தும் தனக்கு தான் வேண்டுமென்று, கட்சிக்காரர்கள் யாருக்கும் தற்போது இந்த ஒரு டெண்டர் வாய்ப்பை கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். அதற்கான முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். யூனியன் டென்டர்கள் அனைத்து உரிமைகளையும் இவர் தான் டெண்டர் எடுத்து நடத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனால் தி.மு.க நிர்வாகிகள் வடிவேலு என்பவர் மீது கடும் அதிர்த்தியில் இருந்து வந்து இருக்கிறார்கள்.


இதனடையில் இலுப்பை தண்டலம் பகுதியில் தி.மு.க நிர்வாகியான பட்டியல் எடுத்து சேர்ந்து கோகுல்நாத் என்பவர் தி.மு.கவினரின் whatsapp குரூப்பில் ஒரு தகவலை பதிவிட்டு இருக்கிறார். குறிப்பாக அவர் "தி.மு.க சார்பாக வரும் அனைத்து ஒப்பந்தங்களும் அவருக்கு தான் சொந்தம். தி.மு.கவுக்காக 1960 முதல் 2023 வரை ஓட்டளித்த எங்களுக்கு திருப்பதி ஏழுமலை சார்பில் லட்டு... இந்த லட்சு எத்தனை காலம் வரும் என்று காலம் பார்க்கலாம். திருப்பதியில் இருந்து வெறும் சீக்கிரமாக லட்டு வரும் கிடைக்கும்" என்று அவர் பதிவிட்டு, முடிந்தவரை தி.மு.க தலைமைக்கு சென்று அடைக்கும் வரை அதிக அளவில் இதை பகிருங்கள் என்றும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


இந்த ஒரு பதிவை பார்த்த ஒன்றிய தி.மு.க செயலாளர் ஆன வடிவேலு என்பவர் பார்த்து, அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளில் திட்டி அவரை கொலை மடித்து மிரட்டல் விடுத்து இருக்கிறார். அந்த ஆடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஒரு வீடியோ தற்பொழுது தி.மு.க தலைமைக்கும் சென்று இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News