புதுக்கோட்டை: சுடுகாட்டிற்கு வழி இல்லாததால் கண்மாய் வழியாக உடலை கொண்டு சென்ற கொடுமை!

புதுக்கோட்டை அருகே உயிரிழந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல பாதை இல்லாததால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மழைநீர் தேங்கியிருந்த கண்மாயில் உடலை எடுத்து சென்று அடக்கம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2021-11-20 07:03 GMT

புதுக்கோட்டை அருகே உயிரிழந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல பாதை இல்லாததால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மழைநீர் தேங்கியிருந்த கண்மாயில் உடலை எடுத்து சென்று அடக்கம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகாவிற்குட்பட்ட துவார் கெண்டையன்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராமகெண்டையார். இவர் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இவரது உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல பொது பாதை இல்லாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக புதுக்குளம் மற்றும் பெரியகுளத்தில் கிராம மக்கள் அனைவரும் இறங்கி கழுத்தளவு தண்ணீரில் கடந்து உடலை தகனம் செய்துள்ளனர்.

இது பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, உயிரிழந்தால் உடலை தகனம் செய்வதற்கு மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றோம். அரசுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினர். இனிமேலாவது அரசு எங்களின் துன்பத்தை போக்குகின்ற வகையில் சுடுகாட்டிற்கு பொதுபாதை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Source, Image Courtesy: News 7 Tamil


Tags:    

Similar News