பராமரிப்பு பணி நிறைவு: மீண்டும் திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடம்.!

பிப்ரவரி மாதம் மூடப்பட்டிருந்த நிலையில், அனைத்து பணிகளும் முறையாக முடிக்கப்பட்டு இன்று முதல் நினைவிடம் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-09 07:54 GMT

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டது. கடந்த ஜனவரி 27ம் தேதி இந்த நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.




 


இதன் பின்னர் பராமரிப்பு காரணமாக பிப்ரவரி மாதம் மூடப்பட்டிருந்த நிலையில், அனைத்து பணிகளும் முறையாக முடிக்கப்பட்டு இன்று முதல் நினைவிடம் திறக்கப்பட்டுள்ளது.


 



இனிமேல் பொதுமக்கள் அனைவரும் பார்வையிடலாம் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Similar News