இறப்பு சான்றிதழ் வாங்க பொதுமக்கள் அலைக்கழிப்பு.. கமல்ஹாசன் பரபரப்பு குற்றச்சாட்டு.!

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ள நிலையில், இறப்பவர்களின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது.

Update: 2021-05-31 07:26 GMT

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ள நிலையில், இறப்பவர்களின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் தினமும் சிகிச்சை பலனின்றி இறப்பவர்களின் எண்ணிக்கையும் அடங்கும்.


 



தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிடுகிறது. ஆனால் இறப்பவர்களின் பெயர் பட்டியலையும் அரசு இணையத்தில் வெளியிடுவதில்லை என்று கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மருத்துவமனைகள் இறந்தவர்களின் விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யாததால் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். வங்கி முதலீடுகள், காப்பீடுகள் மற்றும் அரசின் நிவாரணங்களைப் பெற இச்சான்றிதழ் அவசியம். அரசு உடனடியாக இதைக் கவனிக்கவேண்டும். இவ்வாறு கமல் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News