கரூரில் தி.மு.க.வினர் அராஜகம்.. 100 நாள் வேலை தராமல் இழுத்தடித்தால் பெண்கள் போராட்டம்.!

கரூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பாகுபாடு பார்த்து ஒரு பிரிவினருக்கு மட்டும் தருவதாகவும் மற்ற பிரிவினருக்கு தராமல் இழுத்தடிக்கும் ஊராட்சியை கண்டித்து பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

Update: 2021-07-15 07:42 GMT

கரூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பாகுபாடு பார்த்து ஒரு பிரிவினருக்கு மட்டும் தருவதாகவும் மற்ற பிரிவினருக்கு தராமல் இழுத்தடிக்கும் ஊராட்சியை கண்டித்து பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட தோகைமலை ஒன்றியம், நெய்தலூர் ஊராட்சியில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு குளறுபடியில் ஈடுபடுவதாக மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். அப்பகுதியில் 100 நாள் வேலையில், ஈடுபட்ட வந்த தொழிலாளர்களுக்கு அப்பகுதி திமுக நிர்வாகம், இனிமேல் உங்களுக்கு வேலை இல்லை என்று கூறுவதாக பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


இது தொடர்பாக முறையிடுவதற்காக ஊராட்சி மன்றத் தலைவரை பலமுறை பார்ப்பதற்கு முயற்சி செய்தும் நேரில் பார்க்க முடியவில்லை என பெண்கள் தெரிவித்தனர். அதே போன்று வீட்டில் சென்று பஞ்சாயத்து தலைவரை பார்க்க சென்றாலும் கரூர் சென்றுவிட்டதாக கூறி விரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்களுக்கு வேலை உடனடியாக வழங்க வேண்டும் என்று கிராம பெண்கள், ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மாவடட் நிர்வாகம் மற்றும் முதலமைச்சர் இது போன்ற செயல்களில் ஈடுபடும் திமுகவினர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News