தமிழ்ப் பதிப்புத் துறையில், ஒரு தனி நபர் இயக்கம் என்று அழைக்கப்படும்  'க்ரியா' எஸ். ராமகிருஷ்ணன் காலமானார்.!

தமிழ்ப் பதிப்புத் துறையில், ஒரு தனி நபர் இயக்கம் என்று அழைக்கப்படும்  'க்ரியா' எஸ். ராமகிருஷ்ணன் காலமானார்.!

Update: 2020-11-17 11:54 GMT

மூத்த தமிழ் பதிப்பாளரும், ‘க்ரியா’ பதிப்பகத்தின் பதிப்பாசிரியருமான ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் 76, காலமானார். பதிப்புலக ஆளுமை என்று கூறப்படும் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன், கொரோனா பாதித்து சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.


புத்தக பதிப்பு துறையில் பல்வேறு தொழில் நுட்பங்களை புகுத்தினார். இத்துறையின் முன்னோடியாகவும் விளங்கியவர் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன். கூத்துப்பட்டறை, ரோஜா முத்தையா நூலம், மொழி அறக்கட்டளை என தமது பதிப்பகத்திற்கு வெளியேயும், கலை இலக்கியம் என அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு தமிழுலகம் மறக்காது.
 

Similar News