பிரதமர் மோடியை வரவேற்க சாமி சிலைகளுடன் தமிழக பா.ஜ.க.,!

Update: 2022-07-28 12:01 GMT

மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று துவங்க உள்ளது. இதற்கான கோலாகல விழாவில் பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நாளை முதல் (ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா இன்று நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று செஸ் போட்டியை தொடங்கி வைக்கிறார்.

அதன்படி சென்னைக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக தமிழக பா.ஜ.க., கலை மற்றும் கலாச்சாரப்பிரிவு சார்பில் ஆன்மீக மண் என்பதை நிரூபிக்கும் வகையில், சுவாமி சிலைகளுடன் உற்சாகமாக வரவேற்பு அளிக்க காத்திருக்கின்றனர். இதே போன்று பல இடங்களில் தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் பா.ஜ.க., ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News