சரக்குப் பாட்டிலில் பல்லி ! அதிர்ச்சியில் குடிமகன்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் வாங்கப்பட்ட மதுபாட்டிலில் பல்லி இருந்ததால் மது வாங்கிய குடிமகன் அதிர்ச்சியடைந்துள்ளார். தமிழக டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபாட்டில்களில் அவ்வப்போது பல்லி, பாம்பு, தவளைகள் இருக்கும் செய்திகள் அடிக்கடி வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Update: 2021-09-03 05:56 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் வாங்கப்பட்ட மதுபாட்டிலில் பல்லி இருந்ததால் மது வாங்கிய குடிமகன் அதிர்ச்சியடைந்துள்ளார். தமிழக டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபாட்டில்களில் அவ்வப்போது பல்லி, பாம்பு, தவளைகள் இருக்கும் செய்திகள் அடிக்கடி வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வளையான்குளம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் மதுபாட்டில் வாங்கியுள்ளார். அந்த பாட்டிலில் பல்லி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது பற்றி அவர் பாட்டிலில் பல்லி இருப்பதை வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ குடிமகன்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: News 7

https://news7tamil.live/lizard-found-in-a-liquor-bottle-bought-at-tasmac.html

Tags:    

Similar News