உள்ளாட்சிப் பதவிகள் ஏலம் ! எச்சரிக்கை விடுத்த தேர்தல் ஆணையம் !

உள்ளாட்சிப் பதவிகளுக்கான பதவியிடங்களை ஏலம் இடப்படுவதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Update: 2021-09-17 09:50 GMT

உள்ளாட்சிப் பதவிகளுக்கான பதவியிடங்களை ஏலம் இடப்படுவதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக, உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே பல்வேறு இடங்களில் ஊராட்சி மற்றும் வார்டு உறுப்பினருக்கான பதவிகள் ஏலம் இடப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்றுள்ளது.

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் மக்களாட்சி தத்துவத்திற்கு புறம்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகள் ஏலமிடப்படும் செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி தண்டனைக்குரிய குற்றமாகும். இது போன்று ஏலமிடுவது மக்களின் உணர்வுளுக்கு ஊறு விளைவிக்கும் செயல் என்பதால், இதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Source, Image Courtesy: News 7


Tags:    

Similar News