லாக்டவுனில் வெளியே சுற்றுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.. காவல்துறை எச்சரிக்கை.!
தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 25) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 25) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே இந்த சமயங்களில் மக்கள் யாரும் வெளியே நடமாடக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதையும் மீறி வெளியே சுற்றும் நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் காவல்துறை கூறியுள்ளது.