தி.மு.க. அரசின் அலட்சியம்: மழையில் நனைந்து 50,000 நெல் மூட்டைகள் நாசம்!

Update: 2022-04-10 12:16 GMT

மதுரை மாவட்டத்தில் பெய்த கோடை மழையில் நனைந்து சுமார் 50,000 நெல் மூட்டைகள் சேதமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் தாதம்பட்டி, கட்டகுலம், சின்ன இலந்தை குளம், வைரநத்தம், கல்லணை மற்றும் பாலமேடு உள்ளிட்ட பகுதியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைத்து நாசமாகியது. உடனடியாக இதனை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக அரசின் அலட்சியத்தால் 50000 நெல் மூட்டைகள் நாசமாகியிருப்பதா விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். உடனடியாக நனைந்த நெல் மூட்டைகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Dinakaran

Tags:    

Similar News