தி.மு.கவின் அராஜகபோக்கு தொடர்ந்தால் மக்கள் முடிவு கட்டுவார்கள் - பா.ஜ.க தேசிய செயலாளர்!

தி.மு.க அரசின் அராஜக போக்கு தொடர்ந்து நடப்பதால், மக்கள் முடிவு கட்டுவார்கள் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் இப்ராஹிம் காட்டம்.

Update: 2022-08-23 08:36 GMT

தி.மு.க அரசின் அராஜக போக்கு தொடர்ந்தால் மக்கள் லோக்சபா தேர்தலில் முடிவு கட்டுவார்கள் என்று மதுரையில் பா.ஜ.க சிறுபான்மை அமைப்பை சேர்ந்த தேசிய செயலாளர் இப்ராஹிம் அவர்கள் கூறியுள்ளார். மதுரையில் அமைச்சர் தியாகராஜன் மீது செருப்பு வீச்சு சம்பவம் தொடர்பாக பல்வேறு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். எனவே கைது செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் குடும்பத்தை பா.ஜ.க சிறுபான்மை அமைப்பைச் சேர்ந்த தேசிய செயலாளர் இப்ராகிம் அவர்கள் சந்தித்து பேசினார். 


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பா.ஜ.கவின் தற்போதைய வளர்ச்சி பிடிக்காமல், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு தொடர்ந்து பா.ஜ.க மீதும், பா.ஜ.க உறுப்பினர்கள் மீதும் போலீசார் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இத்தகைய அடக்குமுறைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. மதுரை ராணுவ வீரர் வீரமரணம் அடைந்த சமூகத்திற்கு மதுரை மக்கள் வந்து அஞ்சலி செலுத்தினார்கள் ஆனால் அவர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் விதமாக அமைச்சர் பேசியது பின்னர் நடந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஆனால் எதிர்பாராத விதமாக நடந்த சம்பவத்திற்கு, கட்சி உறுப்பினர்கள் அந்தப் பழியை தூக்கி போட்டு அவர்களை கைது செய்து மிரட்டியும் வருகிறார்கள். 


ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்பொழுது பா.ஜ.க துணை நிற்கும். எனவே திமுக அரசின் இந்த அராஜகப் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. அப்பாவி உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்தில் அடைப்பதும் மிகவும் தவறானது. காவல்துறையினர் தங்களுடைய கடமைகளை செய்ய வேண்டும் அதற்கு மாறாக நிர்வாகத்திற்கு ஏற்றபடி இப்படி செயல்படுவது மிகவும் வேதனையானது. அதற்கு பதிலாக அறவழியில் நின்று போராடி நீதி பெறும்" என்று கூறினார். 

Input & Image courtesy:



Tags:    

Similar News