மதுரை: மதமாற்ற மோசடியை முறியடித்த இந்து முன்னணி!

Update: 2022-03-29 14:49 GMT

தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காக பலர் ஊர், ஊராக சுற்றி வருகின்றனர். வறுமைகளை பயன்படுத்தி சில ஆயிரம் ரூபாய் பணத்தை காண்பித்து ஏழைகளை மதமாற்றத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

இது போன்ற செயல்களை இந்து முன்னணி சார்பாக தமிழகம் முழுவதும் தடுத்து அவர்களை காவல்துறையில் பிடித்து கொடுத்து வருகின்றனர். அப்படி இருந்தும் சில இடங்களில் ரகசியமாக மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போன்று தற்போது மதுரையில் ஒரு சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மதுரை வண்டியூர் 40வது வார்டு மஸ்தான்பட்டி என்ற இடத்தில் கிறிஸ்தவ கும்பல் மதமாற்றம் செய்து கொண்டிருந்தது. இதனை கவனித்த இந்து முன்னணி அவர்களை தடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது. இதனால் மதமாற்றம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News