மதுரை: புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விபத்து ! ஒருவர் பலி !

மதுரையில் புதியதாக கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-08-29 06:47 GMT

மதுரையில் புதியதாக கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை நத்தம் சாலையில் புதியதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஆகாஷ் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுரையில் இருந்து செட்டிக்குளம் இடையே 7.3 கி.மீ தொலைவுக்கு ரூ.694 கோடியில் பறக்கும் மேம்பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை விழுந்த சம்பவம் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதியதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த வழியே செல்பவர்கள் பயந்து கொண்டே வாகனத்தில் செல்லும் நிலை தற்போது உருவாகியுள்ளது.

இந்நிலையில், மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துகுள்ளான சம்பவத்தில் பணிகளை மேற்கொள்ளும் நிறுவன திட்ட பொறுப்பாளர் உட்பட 3 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Source, Image Courtesy: TopNews

https://www.toptamilnews.com/madurai-flyover-collapses-case-filed-against-3-persons/

Tags:    

Similar News