லஞ்சம் வாங்குவதற்கு கூச்சப்படாத அரசு ஊழியர்கள் - உயர்நீதிமன்ற நீதிபதி வருத்தம்!

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதற்கு கூச்சப்படுவதே இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-15 12:55 GMT

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதற்கு கூச்சப்படுவதே இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் லஞ்சம் பெற்றபோது கைதான இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி கூறியதாவது:

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கூச்சப்படுவதே இல்லை. லஞ்ச வழக்கில் ஒருவரை கைது செய்தால் அவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்த வேண்டும். மேலும், போலீசாரின் விசாரணை என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. முறையான விசாரணை இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறையும் பெயரளவிலேயே உள்ளது. இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News