பெண் அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர் !

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் இன்று சட்டப்பேரவையில் 2021, 22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

Update: 2021-08-13 09:04 GMT

தமிழகத்தில் திமுகு அரசு பொறுப்பேற்ற பின்னர் இன்று சட்டப்பேரவையில் 2021, 22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்.

வேலூர், திருப்பூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்படும்.

300 சுற்றுலாத்தளங்கள் மேம்படுத்தப்படும். சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடி ஒதுக்கீடு

100 கோயில்களில் ரூ.100 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெறும். அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் புதுப்பிக்கப்படும்.

Source:Dailythanthi

Image Courtesy: Dailythanthi

https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/13124620/Maternity-leave-for-women-civil-servants-Raised-from.vpf

Tags:    

Similar News