மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - பாதிரியார் அட்டூழியம்!

Update: 2022-05-24 08:00 GMT

ராஜபாளையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ள பாதிரியார் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள மலையடிப்பட்டி என்ற ஊர். அங்கு கிறிஸ்துவ சர்ச் ஒன்று உள்ளது. அதில் ஜோசப் ராஜா என்பவர் பாதிரியாராக செயல்பட்டு வருகிறது. அப்போது அதே பகுதியை சேரந்த மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது மதிக்கத்தக்க சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அவர் மீது உடனடியாக மாற்றுத் திறனாளி சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (மே 24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்று பாதிரியாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அது மட்டுமின்றி பாதிரியாரின் தந்தை, ஆர்ப்பாட்டம் செய்ய வருபவர்களை மிரட்டியதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர். உடனடியாக பாதிரியார் மற்றும் அவரது தந்தையையும் கைது செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News