தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது !

தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர். ஆசிரியர் பணியில் இருந்து குடியரசு தலைவராக உயர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரை போற்றும் வகையில் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Update: 2021-08-19 05:36 GMT

தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர். ஆசிரியர் பணியில் இருந்து குடியரசு தலைவராக உயர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரை போற்றும் வகையில் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்த நல்ல நாளில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் 44 ஆசிரியர்களை மத்தியக் கல்வி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருச்சி மாவ்டம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி மற்றும் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை லலிதா ஆகிய இரண்டு பேரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Source: News 7

Image Courtesy: News 7 Tamil

https://news7tamil.live/national-teachers-award-2-members-from-tamilnadu.html

Tags:    

Similar News